Posted Thu Jun 13, 2019 11:44 am
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என
தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால்
வெளிப்படுத்தும்போது - உங்களால்
தாங்கிக்கொள்ள முடியாது
நெருக்கமானவர்களை விட்டு பிரிந்து நீண்ட தூரம் போய் விடாதீர்கள்.
திரும்பி வரும் வரை வலியோடோ இருக்க வேண்டும் - சிலவேளை திரும்பி வருவதற்கான வழியே இல்லாமல் போய்விடும்.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.
தற்போது இருக்கும் உறவில் எப்போதாவது
பிரிவு ஏற்ப்படும் என தோன்றினால்..!
இப்போதே அதை இழந்து விடுங்கள்.
செடியை போல விருட்சத்தை பிறகு
வேரோடு பிடுங்கி எறிய முடியாது.
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.
பிரிந்து விடுவோம் என்று தெரிந்தால்
பிரியம் வைக்காதீர்கள்.
பிறகு அதை மறப்பதற்கு உயிரை விட வேண்டும்.
விட்டு விலகுபவர்கள் இதை விட ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் என்றுதான் வேறொருவரின் பின் போகிறார்கள்.
பிரிவை தாங்காத உங்களுக்குத்தான் புரியாமலே இருக்கிறது - நீண்ட பெரும் துயரில் இருந்து இப்போதே நீங்கள் விடுதலை அடைந்திருப்பது.
அன்பை வாரி வழங்குவதில் கொடை வள்ளலாக இருப்பீர்கள்.
ஆனால் அதை நீங்கள் எதிர்பார்க்கும் போது பிச்சை எடுப்பது போல் இருக்கும்.
இனி நீ தேவை இல்லை என சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.
அன்பை யாருமே ஆயுதமாக பயன் படுத்தாதீர்கள்.
ஏற்க்கனவே நிறைய காயப்பட்டவர்கள் தான்
அதற்காக எங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
விலகி போனவர்கள் திரும்பி வருவார்கள் திருந்தி விடுவார்கள் என மட்டுமே நினைக்காதீர்கள்.
அவர்கள் உங்களை மறந்து கூட போயிருக்கலாம்.
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.
உங்கள் வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள்
மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.
உங்களை தவறாக பேசுபவர்களிடம் மௌனமாய் இருங்கள்.
அவர்கள் உண்மையை உணரும் நாள் வரும் போது.. நீங்கள் நிறைய பேசலாம்.
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பை திணிக்காதீர்கள்.
தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால்
வெளிப்படுத்தும்போது - உங்களால்
தாங்கிக்கொள்ள முடியாது
நெருக்கமானவர்களை விட்டு பிரிந்து நீண்ட தூரம் போய் விடாதீர்கள்.
திரும்பி வரும் வரை வலியோடோ இருக்க வேண்டும் - சிலவேளை திரும்பி வருவதற்கான வழியே இல்லாமல் போய்விடும்.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.
தற்போது இருக்கும் உறவில் எப்போதாவது
பிரிவு ஏற்ப்படும் என தோன்றினால்..!
இப்போதே அதை இழந்து விடுங்கள்.
செடியை போல விருட்சத்தை பிறகு
வேரோடு பிடுங்கி எறிய முடியாது.
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.
பிரிந்து விடுவோம் என்று தெரிந்தால்
பிரியம் வைக்காதீர்கள்.
பிறகு அதை மறப்பதற்கு உயிரை விட வேண்டும்.
விட்டு விலகுபவர்கள் இதை விட ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் என்றுதான் வேறொருவரின் பின் போகிறார்கள்.
பிரிவை தாங்காத உங்களுக்குத்தான் புரியாமலே இருக்கிறது - நீண்ட பெரும் துயரில் இருந்து இப்போதே நீங்கள் விடுதலை அடைந்திருப்பது.
அன்பை வாரி வழங்குவதில் கொடை வள்ளலாக இருப்பீர்கள்.
ஆனால் அதை நீங்கள் எதிர்பார்க்கும் போது பிச்சை எடுப்பது போல் இருக்கும்.
இனி நீ தேவை இல்லை என சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.
அன்பை யாருமே ஆயுதமாக பயன் படுத்தாதீர்கள்.
ஏற்க்கனவே நிறைய காயப்பட்டவர்கள் தான்
அதற்காக எங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
விலகி போனவர்கள் திரும்பி வருவார்கள் திருந்தி விடுவார்கள் என மட்டுமே நினைக்காதீர்கள்.
அவர்கள் உங்களை மறந்து கூட போயிருக்கலாம்.
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.
உங்கள் வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள்
மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.
உங்களை தவறாக பேசுபவர்களிடம் மௌனமாய் இருங்கள்.
அவர்கள் உண்மையை உணரும் நாள் வரும் போது.. நீங்கள் நிறைய பேசலாம்.
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பை திணிக்காதீர்கள்.