Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

படித்ததில் பிடித்தது

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Thu Jun 13, 2019 11:44 am

 
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என
தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.

அவர்கள் அதை வார்த்தைகளால்
வெளிப்படுத்தும்போது - உங்களால்
தாங்கிக்கொள்ள முடியாது

🌼
நெருக்கமானவர்களை விட்டு பிரிந்து நீண்ட தூரம் போய் விடாதீர்கள்.

திரும்பி வரும் வரை வலியோடோ இருக்க வேண்டும் - சிலவேளை திரும்பி வருவதற்கான வழியே இல்லாமல் போய்விடும்.

🌼
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.

அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.

🌼
தற்போது இருக்கும் உறவில் எப்போதாவது
பிரிவு ஏற்ப்படும் என தோன்றினால்..!

இப்போதே அதை இழந்து விடுங்கள்.

செடியை போல விருட்சத்தை பிறகு
வேரோடு பிடுங்கி எறிய முடியாது.

🌼
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.

தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.

🌼
பிரிந்து விடுவோம் என்று தெரிந்தால்
பிரியம் வைக்காதீர்கள்.

பிறகு அதை மறப்பதற்கு உயிரை விட வேண்டும்.

🌼
விட்டு விலகுபவர்கள் இதை விட ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் என்றுதான் வேறொருவரின் பின் போகிறார்கள்.

பிரிவை தாங்காத உங்களுக்குத்தான் புரியாமலே இருக்கிறது - நீண்ட பெரும் துயரில் இருந்து இப்போதே நீங்கள் விடுதலை அடைந்திருப்பது.

🌼
அன்பை வாரி வழங்குவதில் கொடை வள்ளலாக இருப்பீர்கள்.

ஆனால் அதை நீங்கள் எதிர்பார்க்கும் போது பிச்சை எடுப்பது போல் இருக்கும்.

🌼
இனி நீ தேவை இல்லை என சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.

உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.

🌼
அன்பை யாருமே ஆயுதமாக பயன் படுத்தாதீர்கள்.

ஏற்க்கனவே நிறைய காயப்பட்டவர்கள் தான்
அதற்காக எங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

🌼
விலகி போனவர்கள் திரும்பி வருவார்கள் திருந்தி விடுவார்கள் என மட்டுமே நினைக்காதீர்கள்.

அவர்கள் உங்களை மறந்து கூட போயிருக்கலாம்.

🌼
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.

பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.

🌼
உங்கள் வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள்

மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.

🌼
உங்களை தவறாக பேசுபவர்களிடம் மௌனமாய் இருங்கள்.

அவர்கள் உண்மையை உணரும் நாள் வரும் போது.. நீங்கள் நிறைய பேசலாம்.

🌼
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பை திணிக்காதீர்கள்.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None