Posted Sun Sep 07, 2014 6:21 pm
[You must be registered and logged in to see this image.]
இந்த இரவின் வெளியில்
தூவி இருக்கிறேன்
உன் நினைவுகளை
எது எதுவாகவோ
அது எனக்குள் நீர்கிறது
உன் உருவத்தை
உள்ளத்தில் வரித்து ....
ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..
எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்
ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....
நன்றி ரோஜா கூட்டம் - [You must be registered and logged in to see this link.]
இந்த இரவின் வெளியில்
தூவி இருக்கிறேன்
உன் நினைவுகளை
எது எதுவாகவோ
அது எனக்குள் நீர்கிறது
உன் உருவத்தை
உள்ளத்தில் வரித்து ....
ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..
எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்
ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....
நன்றி ரோஜா கூட்டம் - [You must be registered and logged in to see this link.]