Posted Fri Aug 02, 2013 7:03 pm
படம் : மின்னலே
பாடல் : வெண்மதி
பாடலாசிரியர் : வாலி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ரூப்குமார் ரத்தோட் , திப்பு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கும்
மேகத்துக்கும் சொல்லு….
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கும் மேகத்துக்கும் சொல்லு….
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் …
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்தக் காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்…
(வெண்மதி வெண்மதியே நில்லு ……..)
ஜன்னலில் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி
அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ….
ஆஹாஹா
தீப்பொறி எழ இரு விழிகளும்
தீக்குச்சியென என்னை உரசிட
கோடிபூக்களாய் மலர்ந்தது மனமே ….
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே …..
ஒ ஓ ஓ….
(வெண்மதி……)
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள்
நினைவினில் இருக்கும்
அதுபோல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள்
ராத்திரி வெடிக்கும் …..
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்துப் போ என் மனமே ….
ல ல லாஹி லா லா லேஹே லா லா…..
……
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்தக்காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.