Posted Fri Aug 02, 2013 6:59 pm
பாடல் : கையில் மிதக்கும் கனவா நீ !
இசை : எ ஆர் ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
படம் : ரட்சகன்
கனவா… ? இல்லை காற்றா ..?
கனவா…? நீ காற்றா ..?
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா ?- நீ
இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்ம்ம்ம்ம்
சந்திர தரையில், பாய் இடவா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா? – நீ
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது !
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது !
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது !
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது !
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரும் தூரம் தெரியாது !
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரும் தூரம் தெரியாது !
உன்னில் மற்றொரு பூவு விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது !
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா? – நீ
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா? – நீ
கனவா…? இல்லை காற்றா ..?
கனவா…? நீ காற்றா ..?[/b]