Posted Thu Oct 17, 2013 10:31 pm
Roopa"Yezhu Swarangalukkul " comments
================================================================================
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசை: பழையது
பாடல் ஆசிரியர்: Kannadasan
================================================================================
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (2)
(ஏழு)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)
(ஏழு)
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் (2)
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)
(ஏழு)
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை (2)
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)
(ஏழு)
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க -1&2 - (2)
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)
(ஏழு)