Posted Sat Oct 12, 2013 1:27 pm
படம்: சித்திரையில் நிலாச்சோறு
பாடல்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: பிரியதர்ஷினி
கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ!
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ!
எனக்காக மண்ணில் வந்த!
எனக்காக இந்த மண்ணில் வந்த!
என் தங்கமே! வைரமே! செல்வமே!
நந்தவனமா நீ இருந்தா நல்ல மலரா நானிருப்பேன்!
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு!
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு!
யானை மேல நீயமர்ந்து வலம் வரணும்!
நான் எப்போ எப்போ கேட்டாலும் நீ வரம் தரணும்!
நீ செய்கூலி, சேதாரம் இல்லாத….
என் தங்கமே! வைரமே! செல்வமே!
நிலவு இன்றி போனாலும் பூக்களின்றி போனாலும்
பொட்டு வச்ச சித்திரமா நீ எனக்கு வேணும்!
கொட்டி வச்ச உன்னழக என்னைக்குமே பாடும்!
தூங்கா விளக்கே நீ தூங்கையில நான்
தூங்காம கண்விழிச்சு காத்திருப்பேன்!
நீ வேணும் நிழலாக வாழ்வோடும்…
என் தங்கமே! வைரமே! செல்வமே!