Posted Thu Jan 16, 2014 7:26 pm
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்தவுடன் மீண்டும் ஜில்லா நேசனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக சொல்லியிருந்தாராம் விஜய். ஆனால் ஜில்லாவின் ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்ததால் அந்த வாய்ப்பை தற்போது வேறு இயக்குனருக்கு கைமாறி விட்டதாக கூறப்படுகிறது.
ஜில்லா படத்தை பார்த்து முதலில் திருப்தியடைந்த விஜய், நேசனிடம் அடுத்த ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள், முருகதாஸ் படத்தை முடித்தவுடன் படத்தை ஆரம்பிக்கலாம் என கூறினாராம் விஜய். ஆனால் நேசன் படத்தில் இழுவை, அழுத்தமான காட்சியமைப்பு இல்லாமை, இயக்குனர் மீது எழுந்த விமர்சனம் ஆகியவை விஜய்யை யோசிக்க வைத்துவிட்டது. அதனால் நேசனுக்கு கொடுப்பதாக இருந்த வாய்ப்பை வேறு இயக்குனருக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். இதனால் நேசன் படு அப்செட்டில் இருக்கிறார். ஆனாலும் அடுத்த ஸ்கிரிப்டை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் ஜீவா, ஜித்தன் ரமேஷ் இருவரும் சேர்ந்து அடுத்து தயாரிக்கவுள்ள படத்தை நேசன் தான் இயக்குவார் என்று பரவலாக கூறப்படுகிறது. ஜில்லா பொதுவாக நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும், போட்ட முதலுக்கு ஆபத்தில்லாமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு பணம் வந்துவிட்டது. எனவே நிம்மதி அடைந்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டனர்.
source : thedipaar news