Posted Sat Jan 11, 2014 11:16 pm
[You must be registered and logged in to see this image.]
கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி
வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள்
ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
-
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை,
சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது.
இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும்
குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன;
ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில்
இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால்,
வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே
கூடு கட்டி வாழ்கிறது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப்
பார்த்துச் செல்கின்றனர். ‘
டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், ‘அல்பினீசம்’ நோயால்,
உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை
உருவாக்கும், ‘மெலனின்’ குறைபாடு ஏற்படும்.
இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என,
அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்’ என, மருத்துவர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி தினமலர்
கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி
வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள்
ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
-
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை,
சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது.
இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும்
குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன;
ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில்
இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால்,
வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே
கூடு கட்டி வாழ்கிறது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப்
பார்த்துச் செல்கின்றனர். ‘
டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், ‘அல்பினீசம்’ நோயால்,
உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை
உருவாக்கும், ‘மெலனின்’ குறைபாடு ஏற்படும்.
இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என,
அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்’ என, மருத்துவர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி தினமலர்