Posted Mon Nov 04, 2013 8:42 pm
[You must be registered and logged in to see this image.]
கவர்னர் ஜெனரல் பதவிக்காலம் முடிந்ததும், ராஜாஜி, சென்னை புறப்பட்டார். அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம், சென்னைக்கு அனுப்பப்பட்டன. எல்லாப் பொருட்களையும் அனுப்பி விட்டனரா என்று பார்ப்பதற்கு, பிரதமர் நேருவே, ராஷ்டிரபதி பவனத்துக்கு வந்தார்.
அங்கே ஒரு இரும்புக் கட்டில் இருந்தது. அது, ராஜாஜி பயன்படுத்திய கட்டில். சாய்வாக உட்கார்ந்து எழுதவும், படிக்கவும் வசதியுள்ள கட்டில். அது, ராஜாஜியின் கட்டில் என்றும், ராஷ்டிரபதி பவனத்தின் கவனக்குறைவால், தங்கி விட்டது என்றும் கருதிய நேரு, அதை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். கட்டிலும், சென்னைக்கு வந்து விட்டது.
"இதை, சென்னைக்கு அனுப்புமாறு நான் சொல்லவில்லையே; அரசு பணத்தில் வாங்கிய இக்கட்டில், எப்படி சென்னைக்கு வந்தது?' என்று ராஜாஜிக்கு வியப்பு; பிறகு விசாரித்தார். நேருஜியின் உத்தரவின்படி கட்டில் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரிந்தது.
...
பிறகு, நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார் ராஜாஜி.
"தங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கட்டில், என்னுடையது அல்ல; அது அரசாங்கப் பணத்தில் வாங்கப்பட்டது. எப்படியோ, அது என்னிடம் வந்துவிட்டது. அந்த கட்டிலின் உத்தேச விலைக்கு, ஒரு செக் அனுப்பியிருக்கிறேன். அரசு கஜானாவில் அத்தொகையை சேர்ப்பித்து விடுங்கள்...' என்று, அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் ராஜாஜி.
கவர்னர் ஜெனரல் பதவிக்காலம் முடிந்ததும், ராஜாஜி, சென்னை புறப்பட்டார். அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம், சென்னைக்கு அனுப்பப்பட்டன. எல்லாப் பொருட்களையும் அனுப்பி விட்டனரா என்று பார்ப்பதற்கு, பிரதமர் நேருவே, ராஷ்டிரபதி பவனத்துக்கு வந்தார்.
அங்கே ஒரு இரும்புக் கட்டில் இருந்தது. அது, ராஜாஜி பயன்படுத்திய கட்டில். சாய்வாக உட்கார்ந்து எழுதவும், படிக்கவும் வசதியுள்ள கட்டில். அது, ராஜாஜியின் கட்டில் என்றும், ராஷ்டிரபதி பவனத்தின் கவனக்குறைவால், தங்கி விட்டது என்றும் கருதிய நேரு, அதை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். கட்டிலும், சென்னைக்கு வந்து விட்டது.
"இதை, சென்னைக்கு அனுப்புமாறு நான் சொல்லவில்லையே; அரசு பணத்தில் வாங்கிய இக்கட்டில், எப்படி சென்னைக்கு வந்தது?' என்று ராஜாஜிக்கு வியப்பு; பிறகு விசாரித்தார். நேருஜியின் உத்தரவின்படி கட்டில் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரிந்தது.
...
பிறகு, நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார் ராஜாஜி.
"தங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கட்டில், என்னுடையது அல்ல; அது அரசாங்கப் பணத்தில் வாங்கப்பட்டது. எப்படியோ, அது என்னிடம் வந்துவிட்டது. அந்த கட்டிலின் உத்தேச விலைக்கு, ஒரு செக் அனுப்பியிருக்கிறேன். அரசு கஜானாவில் அத்தொகையை சேர்ப்பித்து விடுங்கள்...' என்று, அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் ராஜாஜி.